search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறிய வாலிபர் மீது வழக்கு

    கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    திருக்கனூர்:

    புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பாதித்தவர்கள் வசித்த கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதை மீறி கூனிச்சம்பட்டில் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறியதாக அஜித் (வயது 26) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதேபோல் வாதானூரில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்து வெளியேறி தெருவில் சுற்றித்திரிந்ததாக உதயகுமார் (35) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×