என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாடம்பாக்கம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Byமாலை மலர்5 July 2020 7:09 AM GMT (Updated: 5 July 2020 7:09 AM GMT)
மாடம்பாக்கம் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் தாய் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் உமா (வயது 35), இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் உமா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உமா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து உமா செல்போனில் யாரிடம் பேசி கொண்டிருந்தார், எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகிறன்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த மாடம்பாக்கம் தாய் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் உமா (வயது 35), இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவரது கணவர் இறந்து விட்டார். இவருக்கு 17 வயதில் ஒரு மகன், 15 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் உமா நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வீட்டில் உள்ள படுக்கை அறைக்கு சென்று கதவை உள்தாழ்ப்பாள் போட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். உமா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து உமா செல்போனில் யாரிடம் பேசி கொண்டிருந்தார், எதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரித்து வருகிறன்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X