என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆவூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்- 2 வாலிபர்கள் படுகாயம்
Byமாலை மலர்4 July 2020 2:27 PM GMT (Updated: 4 July 2020 2:27 PM GMT)
ஆவூர் அருகே விபத்தில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
ஆவூர் அருகே உள்ள அருவங்கால்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சரவணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து நாலுரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். நாலுரோடு அருகே சென்றபோது எதிரே இலுப்பூர் தாலுகா பெரியகுரும்பப்பட்டியை சேர்ந்த ராசு மகன் கணேசன்(33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர் அருகே உள்ள அருவங்கால்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சரவணன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் இரவு ஆலங்குளத்தில் இருந்து நாலுரோட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். நாலுரோடு அருகே சென்றபோது எதிரே இலுப்பூர் தாலுகா பெரியகுரும்பப்பட்டியை சேர்ந்த ராசு மகன் கணேசன்(33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் 2 பேரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். அவர்களுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X