search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழடியில் அகழாய்வு
    X
    கீழடியில் அகழாய்வு

    அகழாய்வு பணி- அகரத்தில் பாசிகள் கண்டெடுப்பு

    திருப்புவனம் அருகே அகழாய்வுகளில் இதுவரை வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் 6-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

    அகரத்தில் 6 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.

    இந்நிலையில் முதன்முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பாசிகள் தொழில் வர்த்தக பயன்பாட்டில் இருந்துள்ளன. மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், மிகப்பெரிய அளவில் வியாபாரத்திற்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் இந்த பாசிகள் எதற்காக பயன்படுத்தினர், எந்த வகையை சார்ந்தவை, எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தியவை என்பது ஆய்வில் தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.
    Next Story
    ×