என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மேலும் 9 கட்டுப்பாட்டு மண்டலம்
Byமாலை மலர்4 July 2020 7:13 AM GMT (Updated: 4 July 2020 7:13 AM GMT)
புதுவையில் மேலும் 9 கட்டுப்பாட்டு மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.கதிர்காமம் விநாயகர் கோவில் வீதி, 2.திலாசுபேட்டை வீமன் நகர் மாரியம்மன் கோவில் வீதி, 3.தட்டாஞ்சாவடி சொக்கநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, 4.தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் முருகேசன் வீதி, 6.லாஸ்பேட்டை சாந்தி நகர் சேரன்வீதி, 7.அரியாங்குப்பம் முதல் குறுக்குத்தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒருபகுதி, 8. அபிஷேகப்பாக்கம் புதுநகரின் ஒருபகுதி, 9.மணவெளி முதல் குறுக்குத்தெரு ஒருபகுதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
அந்த பகுதிகளில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.
மேலும் புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றித்திரிந்ததாக 1,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்க அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக கொரோனா பாதித்தவர்கள் வசித்த பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது. அதன்படி 1.கதிர்காமம் விநாயகர் கோவில் வீதி, 2.திலாசுபேட்டை வீமன் நகர் மாரியம்மன் கோவில் வீதி, 3.தட்டாஞ்சாவடி சொக்கநாதன்பேட்டை மாரியம்மன் கோவில் வீதி, 4.தர்மாபுரி திரவுபதி அம்மன் கோவில் வீதி, 5.கருவடிக்குப்பம் நாகம்மன் நகர் முருகேசன் வீதி, 6.லாஸ்பேட்டை சாந்தி நகர் சேரன்வீதி, 7.அரியாங்குப்பம் முதல் குறுக்குத்தெரு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஒருபகுதி, 8. அபிஷேகப்பாக்கம் புதுநகரின் ஒருபகுதி, 9.மணவெளி முதல் குறுக்குத்தெரு ஒருபகுதி ஆகியவை கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்படுகிறது.
அந்த பகுதிகளில் பொதுபோக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்த பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது.
மேலும் புதுவை மாநிலத்தில் இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,629 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 16,667 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவையின்றி சுற்றித்திரிந்ததாக 1,432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X