என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மோட்டார் சைக்கிள் திருடன் கைது- 13 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்4 July 2020 7:08 AM GMT (Updated: 4 July 2020 7:08 AM GMT)
புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடனை கைது செய்த போலீசார் 13 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி மரப்பாலம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்த அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை டி.ஆர். நகரை சேர்ந்த ரமணா (வயது24) என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
தற்போதைய விதிமுறைகளின்படி அவரை கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரமணா அங்கிருந்து தப்பி ஓடினார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தேடிப்பிடித்து கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குணமடைந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்பேரில் முதலியார்பேட்டையில் 6, அரியாங்குப்பத்தில் 2, உருளையன்பேட்டையில் 3, விழுப்புரத்தில் 2 என மொத்தம் 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுவை முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி மரப்பாலம் சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபரை மடக்கி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணமாக பதில் அளித்த அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் புதுவை டி.ஆர். நகரை சேர்ந்த ரமணா (வயது24) என்பதும் அவர் ஓட்டி வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.
தற்போதைய விதிமுறைகளின்படி அவரை கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் ரமணா அங்கிருந்து தப்பி ஓடினார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை தேடிப்பிடித்து கொரோனா சிறப்பு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது குணமடைந்த நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்பேரில் முதலியார்பேட்டையில் 6, அரியாங்குப்பத்தில் 2, உருளையன்பேட்டையில் 3, விழுப்புரத்தில் 2 என மொத்தம் 13 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X