என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
Byமாலை மலர்3 July 2020 9:02 AM GMT (Updated: 3 July 2020 9:02 AM GMT)
சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடேசன் நகரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவரது மனைவி விஜயலட்சுமி. கணவன்-மனைவி இருவரும் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டை நண்பரான அதேபகுதியை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் பராமரித்து வருகிறார். நேற்று காலை விஜயபாஸ்கர் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் திறந்து கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்டாலினுக்கும், சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் ஸ்டாலினின் உறவினர் காந்திதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பீரோவில் இருந்த 3½ பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X