என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி கொலை- குற்றவாளி கைது
Byமாலை மலர்2 July 2020 2:00 AM GMT (Updated: 2 July 2020 1:30 PM GMT)
புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்தது தொடர்பாக குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 30-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டுக்குள் படுத்து கொண்டது. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்து இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை கடந்த 30-ந் தேதி இரவு முதல் காணவில்லை கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏம்பல் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், சிறுமியை போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் அந்த சிறுமி ஏம்பல் கிளவி தம்மம் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரியில் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த ஏம்பல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமாரும் வந்து விசாரணை நடத்தினார். பின்னர், அந்த சிறுமியின் உடல், பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்ப நாய் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி ஒரு வீட்டுக்குள் படுத்து கொண்டது. இதனால், அந்த சிறுமியை அந்த வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததுடன், கொடூரமாக கொலை செய்து இங்கு உடலை வீசி சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் போலீசாரிடம் கூறுகையில், சிறுமியை ஒரு வாலிபர் கறம்பவயல் காளிகோவில் பக்கம் அழைத்து சென்றதாக தெரிவித்தனர். அதன்பேரில், அந்த வாலிபர் மற்றும் இன்னொரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த பூக்கடை வியாபாரியான ராஜாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X