என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பவானி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
Byமாலை மலர்1 July 2020 3:03 PM GMT (Updated: 1 July 2020 3:03 PM GMT)
பவானி போலீஸ் நிலையத்தில் திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். அவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 24). லேத் பட்டறை தொழிலாளி. திப்பிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். அவருடைய மகள் பிரியதர்ஷினி (19). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் ஒரே பஸ்சில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். திடீரென 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை மாற்றி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே பிரியதர்ஷினியின் தந்தை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ‘வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகளை காணவில்லை’ என்று புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் பாதுகாப்பு கேட்டு நேற்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி 2 பேரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ரீதரின் பெற்றோர் மட்டும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீரங்கன். அவருடைய மகன் ஸ்ரீதர் (வயது 24). லேத் பட்டறை தொழிலாளி. திப்பிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன். அவருடைய மகள் பிரியதர்ஷினி (19). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ.2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் ஒரே பஸ்சில் பயணம் செய்யும்போது பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். திடீரென 2 பேரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவிலில் மாலை மாற்றி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே பிரியதர்ஷினியின் தந்தை பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், ‘வீட்டை விட்டு வெளியே சென்ற தனது மகளை காணவில்லை’ என்று புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஸ்ரீதரும், பிரியதர்ஷினியும் பாதுகாப்பு கேட்டு நேற்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதினி 2 பேரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் பிரியதர்ஷினியின் பெற்றோர் அவரது காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஸ்ரீதரின் பெற்றோர் மட்டும் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 பேரும் அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X