search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
    X
    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கொரோனா பாதிப்பு இல்லை

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியியில் கடந்த சில தினங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநில முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் வேலை நடைபெற்றது. இரண்டு நாட்கள் அலுவலகம் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.

    அதேசமயம் முதலமைச்சர் நாராயணசாமி உள்பட அவரது வீடு, அலுவலகம், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நாராயணசாமிக்கு கொரோனா இல்லை என தெரியவந்துள்ளது.

    நாராயணசாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்பு ஏப்ரல் மாதம் முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்யப்பட்டது. 
    Next Story
    ×