என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இணையதளம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு - கலெக்டர் கதிரவன் தகவல்
Byமாலை மலர்28 Jun 2020 3:39 PM GMT (Updated: 28 Jun 2020 3:39 PM GMT)
தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம்.
ஈரோடு:
தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ( www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும் தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம். இந்த சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி வேலைநாடும் இளைஞர்கள், இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலை அளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான சேவை உருவாக்கி தரப்பட்டு உள்ளது. எனவே இந்த சேவையை வேலைநாடுநர்களும், வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் வேலைநாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் நோக்கத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் வேலைவாய்ப்பு பிரிவால் ‘தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம்’ ( www.tnprivatejobs.tn.gov.in) என்ற இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்கள் இந்த இணையத்தில் நேரடியாக பதிவு செய்து தங்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றிற்கு ஏற்ற பணி வாய்ப்புகளை பெறலாம். மேலும் தனியார் துறை சார்ந்த அனைத்து சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் காலிப்பணியிடங்களை இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அந்த பணி காலியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்யலாம். இந்த சேவை, கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஏற்கனவே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போதைய சூழ்நிலையில் இதற்கு மாற்றாக, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையதளம் மூலம் இணையவழி நேர்காணல் மற்றும் இணையவழி பணி நியமனம் ஆகிய வசதிகளை பயன்படுத்தி வேலைநாடும் இளைஞர்கள், இணைய வழியாக தொடர்பு கொண்டு தனியார் துறை வேலை அளிப்போர்கள் பணி வாய்ப்புகளை அளிப்பதற்கான சேவை உருவாக்கி தரப்பட்டு உள்ளது. எனவே இந்த சேவையை வேலைநாடுநர்களும், வேலை அளிப்போர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X