search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொடாத்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

    கொடாத்தூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது அப்பகுதி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    திருக்கனூர்:

    புதுவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்தவர்களால் திருக்கனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் முககவசம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்த கொடாத்தூர் காலனியை சேர்ந்த ஒரு பெண் கடந்த சில நாட்களுக்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டார். அவர் மூலம் அவரது தந்தைக்கும் தொற்று பரவியது. இவர்கள் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த அவரது தாய், அக்கா, தம்பி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு தொற்று பாதித்து இருப்பது கொடாத்தூர் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திருக்கனூர் சுற்றுவட்டார பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×