என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் ஜெயிலில் 25-வது நாளாக முருகன் உண்ணாவிரதம்
Byமாலை மலர்26 Jun 2020 2:59 AM GMT (Updated: 26 Jun 2020 2:59 AM GMT)
முருகன் 25-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜெயில் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். முருகன் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அதனால் முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் முருகன் நேற்று 25-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜெயில் கைதிகளை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடாக அவர்கள் செல்போன் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேசி வருகிறார்கள். முருகன் வீடியோ காலில் மனைவி நளினி மற்றும் உறவினர்களிடம் பேச ஜெயில் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.
அதனால் முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். யாருடன் பேசாமல் தியான நிலையில் இருக்கும் அவரின் உடல்நிலையை டாக்டர்கள் தினமும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் அவருக்கு உடல் சோர்வு ஏற்படும் போது குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது.
இந்த நிலையில் முருகன் நேற்று 25-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X