search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    புதுச்சேரியில் 500-ஐ தொட்ட கொரோனா பாதிப்பு

    புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 4.73 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14,894 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,42,900 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 70,390 பேருக்கும், தமிழகத்தில் 67,468 பேருக்கும், குஜராத்தில் 28,943 பேருக்கும், ராஜஸ்தானில் 16,009 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 12,448 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் மாஹே பகுதிகளில் 32 பேருக்கும், காரைக்காலில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500ஆக உயர்ந்துள்ளது. 
    Next Story
    ×