search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா கைதி சிக்கினார்

    கதிர்காமம் மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா கைதியை தனிப்படை போலீசார் கைது செய்து அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிள்கள் திருடிய அரியாங்குப்பம் ராம்சிங் நகரை சேர்ந்த ரமணா (வயது 24) என்பவரை கைது செய்தனர். கொரோனா பரிசோதனை செய்வதற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

    அங்கு ரமணாவுக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் அவர் மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடிவந்தனர். நேற்று நள்ளிரவில் ரமணாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
    Next Story
    ×