என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிநபர் பழக்க, வழக்கமே கொரோனா பரவலுக்கு காரணம்- கவர்னர் கிரண்பேடி
Byமாலை மலர்22 Jun 2020 6:23 AM GMT (Updated: 22 Jun 2020 6:23 AM GMT)
புதுவையில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதற்கு தனிநபர் பழக்க, வழக்கமே முக்கிய காரணம் என்று கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது முதல் 81 நாட்களில் 100 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2-வது 10 நாட்களில் 100 நபர்கள் பாதிக்கப்பட்டனர். 3-வது 5 நாட்களில் 100 பேர் என பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனிப்பட்ட பொறுப்பான நடத்தை மட்டுமே பரவலின் வேகத்தை தடுக்க முடியும்.
கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால் புதுச்சேரியில் மக்கள் அனைவரும் கடினமான சூழலில் இருப்போம். கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவ தனிநபர் பழக்க வழக்கமே முக்கிய காரணம். சிலர் முகக்கவசம் சரியாக பயன்படுத்துவதில்லை. பலரும் கைக்குட்டையை முககவசமாக பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. கைக்குட்டை முகக் கவசமாகாது.
பொது இடத்தில் வந்து பேசும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. எனவே, வெளியில் செல்லும்போது நாம் கட்டாயமாக முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று திரும்பிய உடன் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கவர்னர் கிரண்பேடி நேற்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது முதல் 81 நாட்களில் 100 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2-வது 10 நாட்களில் 100 நபர்கள் பாதிக்கப்பட்டனர். 3-வது 5 நாட்களில் 100 பேர் என பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தனிப்பட்ட பொறுப்பான நடத்தை மட்டுமே பரவலின் வேகத்தை தடுக்க முடியும்.
கொரோனா தொற்று இதே வேகத்தில் பரவினால் புதுச்சேரியில் மக்கள் அனைவரும் கடினமான சூழலில் இருப்போம். கொரோனா பாதிப்பு அதிவேகமாக பரவ தனிநபர் பழக்க வழக்கமே முக்கிய காரணம். சிலர் முகக்கவசம் சரியாக பயன்படுத்துவதில்லை. பலரும் கைக்குட்டையை முககவசமாக பயன்படுத்துகின்றனர். இது முற்றிலும் தவறு. கைக்குட்டை முகக் கவசமாகாது.
பொது இடத்தில் வந்து பேசும்போது முகக்கவசம் அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு. எனவே, வெளியில் செல்லும்போது நாம் கட்டாயமாக முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியில் சென்று திரும்பிய உடன் கை, கால்களை சோப்பு போட்டு கழுவி சுத்தமாக இருப்பதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். இதன் மூலமாக நாம் சுகாதாரத்தை பாதுகாக்க முடியும். நமது ஒன்றிணைந்த முயற்சிகளால்தான் கொரோனா பரவலை தடுக்க முடியும்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X