search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
    X
    புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

    புதுச்சேரியில் கொரோனா அதிகரிப்பு- கட்டுப்பாடுகளை கடுமையாக்க முடிவு

    புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 339 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

    புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும், இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

    உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் நாராயணசாமி கூறினார்.

    கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்குள் பொதுமக்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சரியான காரணங்கள் இல்லாமல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் முன் அனுமதி பெற்றால் மட்டுமே அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×