என் மலர்tooltip icon

    செய்திகள்

    கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் மூடி கிடந்தபோது எடுத்தபடம்.
    X
    கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி நுழைவு வாயில் மூடி கிடந்தபோது எடுத்தபடம்.

    கொரோனா பீதி எதிரொலி- கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி மூடல்

    கொரோனா பீதி எதிரொலியாக கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரி மூடப்பட்டு உள்ளது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டனில் செயல்படும் கன்டோன்மெண்ட் 2-வது வார்டுக்கு உட்பட்டது நல்லப்பன் தெரு. இங்கு நேற்று முன்தினம் கரூரில் இருந்து ஆசிரியை ஒருவர் வந்தார். அவரிடம் சளி மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள், கன்டோன்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைகளுக்கு சென்று வந்தனர். இதன் காரணமாக கொரோனா பீதி எதிரொலியாகவும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாகவும் நேற்று மட்டும் ஆஸ்பத்திரி மூடப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

    இது தவிர வெலிங்டன் ராணுவ முகாமிற்கு உட்பட்ட சப்ளை டிப்போ பகுதிக்கு வேலூரில் இருந்து வந்த பெண்ணுக்கு சளி மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என்ற சந்தேகம் எழுந்தது. உடனடியாக அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து அந்த பகுதிக்கு செல்லும் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு, ராணுவத்தினரின் தீவிர கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் வெளியில் இருந்து உள்ளேயும், உள்ளே இருந்து வெளியேயும் யாரும் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×