என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கடலூரில் ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா
கடலூரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட நேற்று ஒரே நாளில் 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடலூர் மாவட்டத்திலும் இந்த வைரஸ் பாதிப்பால் தினம் தினம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசுடன், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட 95 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 568 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 471 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 997 பேருடைய உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்தது. இதில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 3 பேர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த 3 பேருடைய எண்ணிக்கை நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இதில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவு துணை இயக்குனரான சுமார் 50 வயதான டாக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த நபருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
இதுபற்றி அறிந்த காசநோய் பிரிவு துணை இயக்குனர், அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாக்டரிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த டாக்டர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தவிர கடலூரை சேர்ந்த 4 செவிலியர்களுக்கும், சென்னையில் இருந்து கடலூர் வந்த 50 பேருக்கும், செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 20 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர், ஒடிசாவில் இருந்து வந்த 6 பேர், கேரளா, கர்நாடகா, டெல்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரத்தூர், புவனகிரியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதில் பண்ருட்டியை சேர்ந்த நபர், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உமிழ்நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு யார் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒருவர் மட்டுமே குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். இன்னும் 355 பேருடைய பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தற்போது 5-வது கட்டமாக வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவும் வேகம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கடலூர் மாவட்டத்திலும் இந்த வைரஸ் பாதிப்பால் தினம் தினம் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க அரசுடன், மாவட்ட நிர்வாகமும் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
தற்போது வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூரில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் உள்பட 95 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 568 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 471 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று 997 பேருடைய உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்தது. இதில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 3 பேர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த 3 பேருடைய எண்ணிக்கை நாகை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 95 பேர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
இதில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் காசநோய் பிரிவு துணை இயக்குனரான சுமார் 50 வயதான டாக்டர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்ததாக தெரிகிறது. பின்னர் அந்த நபருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்ததில், கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரிந்தது.
இதுபற்றி அறிந்த காசநோய் பிரிவு துணை இயக்குனர், அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே டாக்டரிடம் இருந்து உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் முடிவில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த டாக்டர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தவிர கடலூரை சேர்ந்த 4 செவிலியர்களுக்கும், சென்னையில் இருந்து கடலூர் வந்த 50 பேருக்கும், செங்கல்பட்டில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டியத்தில் இருந்து வந்த 20 பேர், சிங்கப்பூரில் இருந்து வந்த 3 பேர், ஒடிசாவில் இருந்து வந்த 6 பேர், கேரளா, கர்நாடகா, டெல்லியில் இருந்து வந்த தலா ஒருவரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஒரத்தூர், புவனகிரியை சேர்ந்த 2 கர்ப்பிணிகளுக்கும், சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும், பண்ருட்டியை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதில் பண்ருட்டியை சேர்ந்த நபர், சளி, இருமலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவரது உமிழ்நீர் மாதிரியை பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஆனால் அவருக்கு யார் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 663 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒருவர் மட்டுமே குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளார். இன்னும் 355 பேருடைய பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Next Story






