என் மலர்
செய்திகள்

ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வரும் கல் பங்களாவை காணலாம்
200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் பங்களாவை புதுப்பிக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு
ஊட்டியில் அரசு கலைக்கல்லூரி செயல்படும் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த கல் பங்களாவை புதுப்பிக்க ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு கட்டிடங்களை கட்டினர். கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், நீலகிரியை கண்டறிந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனைபோல் ஊட்டி இருப்பதை அறிந்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ளதைபோல் பாரம்பரிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்தார். 18-ம் நூற்றாண்டில் ஊட்டி சேரிங்கிராஸ் மேல்பகுதியில் கல் பங்களா கட்டப்பட்டது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கட்டிடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். அப்போது கோடைகாலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாண தலைமை செயலகம், ஊட்டி கல் பங்களாவில் செயல்பட்டது. இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்க ஊட்டியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது.
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம், அந்த கல் பங்களா ஆகும். இதனை கடந்த 1955-ம் ஆண்டில் தமிழக முதல் அமைச்சராக இருந்த காமராஜர், அரசு கலைக்கல்லூரியாக மாற்றி செயல்பட வைத்தார். அந்த கட்டிடத்தில் கல்லூரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உள்பட 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நூலகம் செயல்பட்டு வருகிறது. மணிகூண்டும் உள்ளது. தற்போதும் அந்த கட்டிடங்கள் பழமை மாறாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தநிலையில் பாரம்பரியமிக்க கல் பங்களாவை பாதுகாக்கும் வகையில், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வி மானியக்கோரிக்கையில் அதற்கான நிதியை ஒதுக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். விரைவில் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
கடந்த 1,820-ம் ஆண்டில் கல் பங்களா கட்டப்பட்டது. காலப்போக்கில் அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டு 18 இளங்கலை பாட பிரிவுகளையும், 12 முதுகலை பாட பிரிவுகளையும், ஏழு ஆய்வு பிரிவுகளையும், 8 உயர் ஆய்வு முனைவர் பட்ட பிரிவுகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமையான அந்த பங்களாவை புதுப்பிக்க ரூ.8.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமெண்டு பயன்படுத்தாமல், சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டியதுபோல், பழமை மாறாமல் பங்களா புதுப்பிக்கப்படுகிறது. தற்போது கல்லூரியின் நுழைவுவாயில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்தபோது பல்வேறு கட்டிடங்களை கட்டினர். கோவை கலெக்டராக இருந்த ஜான் சல்லீவன், நீலகிரியை கண்டறிந்து இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டனைபோல் ஊட்டி இருப்பதை அறிந்தார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் உள்ளதைபோல் பாரம்பரிய கட்டிடங்களை கட்ட முடிவு செய்தார். 18-ம் நூற்றாண்டில் ஊட்டி சேரிங்கிராஸ் மேல்பகுதியில் கல் பங்களா கட்டப்பட்டது. இயற்கை எழில் மிகுந்த இடத்தில் கட்டிடத்தை சுற்றி ஓக் மரங்களை நடவு செய்தார். அப்போது கோடைகாலத்தில் ஆங்கிலேயர்களின் சென்னை மாகாண தலைமை செயலகம், ஊட்டி கல் பங்களாவில் செயல்பட்டது. இங்கு பணிபுரிந்த ஊழியர்கள் தங்க ஊட்டியில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. பின்னர் கலெக்டர் பங்களாவாகவும் செயல்பட்டு வந்தது.
ஊட்டியில் ஆங்கிலேயர்கள் கட்டிய முதல் கட்டிடம், அந்த கல் பங்களா ஆகும். இதனை கடந்த 1955-ம் ஆண்டில் தமிழக முதல் அமைச்சராக இருந்த காமராஜர், அரசு கலைக்கல்லூரியாக மாற்றி செயல்பட வைத்தார். அந்த கட்டிடத்தில் கல்லூரி முதல்வர் அலுவலகம், தமிழ், கணிதம் உள்பட 5 பாடப்பிரிவுகளுக்கான வகுப்பறைகள், நூலகம் செயல்பட்டு வருகிறது. மணிகூண்டும் உள்ளது. தற்போதும் அந்த கட்டிடங்கள் பழமை மாறாமல் பொலிவுடன் காட்சியளிக்கிறது. இந்தநிலையில் பாரம்பரியமிக்க கல் பங்களாவை பாதுகாக்கும் வகையில், அதனை பழமை மாறாமல் புதுப்பிக்க தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. சட்டப்பேரவையில் நடந்த உயர்கல்வி மானியக்கோரிக்கையில் அதற்கான நிதியை ஒதுக்கி உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்தார். விரைவில் பொதுப்பணித்துறை மூலம் பணிகள் நடைபெற உள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது:-
கடந்த 1,820-ம் ஆண்டில் கல் பங்களா கட்டப்பட்டது. காலப்போக்கில் அரசு கலைக்கல்லூரியாக மாற்றப்பட்டு 18 இளங்கலை பாட பிரிவுகளையும், 12 முதுகலை பாட பிரிவுகளையும், ஏழு ஆய்வு பிரிவுகளையும், 8 உயர் ஆய்வு முனைவர் பட்ட பிரிவுகளையும் கொண்டு செயல்பட்டு வருகிறது. 200 ஆண்டுகள் பழமையான அந்த பங்களாவை புதுப்பிக்க ரூ.8.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிமெண்டு பயன்படுத்தாமல், சுண்ணாம்பு கலவையை கொண்டு கட்டியதுபோல், பழமை மாறாமல் பங்களா புதுப்பிக்கப்படுகிறது. தற்போது கல்லூரியின் நுழைவுவாயில் புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






