search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா நோய் தொற்று பரிசோதனை
    X
    கொரோனா நோய் தொற்று பரிசோதனை

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    நாகை மாவட்டத்தில் ஒரே நாளில் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நாகை மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வேலைக்காக சென்றவர்கள் தற்போது தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர்.

    இதில் பலருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டு வருவதால், நாகை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நாகை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து வேதாரண்யம் அருகே உள்ள செம்போடைக்கு வந்த சிறப்பு போலீஸ் படையை சேர்ந்த 28 வயது நபர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த 5 பேர் உள்பட மொத்தம் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.

    இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இதில் 59 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 107 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×