search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
    X
    அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

    ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம்- அமைச்சர் தகவல்

    புதுவையில் கொரோனா தொற்றை சமாளிக்க ஒப்பந்த அடிப்படையில் டாக்டர்கள், செவிலியர்களை நியமிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மே 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை கொரோனா தொற்று 7.3 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் 50 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    தற்போது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான உபகரணங்கள் போதிய அளவில் உள்ளது. மருத்துவ வல்லுனர்கள் கொரோனா தொற்றின் தாக்கம் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். அவ்வாறு நீடித்தால் மருத்துவ உபகரணங்கள் கூடுதலாக தேவைப்படும். இது தொடர்பாக முதல்- அமைச்சரிடம் வலியுறுத்துவேன். கொரோனா நோயாளிகளை சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்களும் தேவைப்படுவார்கள். அவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி வருகிறேன்.

    சில நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வதாக கோரிக்கை விடுக்கின்றனர். வெளிமாநிலங்களில் நாள் ஒன்றுக்கு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் ரூ.40 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதனை குறைத்து நிர்ணயிக்க முதல்-அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளேன்.

    கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக முககவசம் அணிவது, அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பின்பற்றவேண்டும். புதுச்சேரியில் 10 முதல் 15 சதவீத மக்கள் இதை கடைபிடிக்காமல் உள்ளனர். வெளி மாநிலங்களில் முக கவசம் அணியாவிட்டால் முதல் முறை ரூ.500-ம், 2-வது முறை ரூ.ஆயிரமும் அபராதம் வசூலிக்கின்றனர். அதுபோல் அபராதம் விதிப்பதை புதுச்சேரியிலும் கடுமையாக்க வேண்டும்.

    புதுச்சேரி மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. ஆந்திரா மக்களுக்கு அந்த மாநில முதல்-அமைச்சர் பல்வேறு வகைகளில் நிவாரணங்களை வழங்கி வருகின்றார். இதனால் ஏனாமை சுற்றியுள்ள ஆந்திர மாநில மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் உள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதம் வரை வியாபாரம் குறைந்துவிட்டது. ஆனால் வாடகை, சம்பளம், வங்கி மாதாந்திர தொகை ஆகியவை அப்படியே கொடுக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×