என் மலர்
செய்திகள்

விபத்து பலி
ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலி
ஆம்புலன்ஸ் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வண்டலூர்:
சென்னை அசோக்நகர் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (வயது 62), இவர் நேற்று முன்தினம் சிங்கபெருமாள் கோவில் அருகே வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். பின்னர் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் யமுனா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த யமுனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை அசோக்நகர் ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யமுனா (வயது 62), இவர் நேற்று முன்தினம் சிங்கபெருமாள் கோவில் அருகே வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வந்துள்ளார். பின்னர் காட்டாங்கொளத்தூர் பஸ் நிறுத்தம் அருகே சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஆம்புலன்ஸ் யமுனா மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த யமுனாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இருந்தார். இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






