என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா

    அரியலூரில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 381 பேர் பாதிக்கப்பட்டிருந்ததில், 363 பேர் சிகிச்சை பெற்று மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். மீதமுள்ள 18 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்ட எருதுகாரன்பட்டியை சேர்ந்த 64 வயதுடைய முதியவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 35 வயதுடைய ஒரு வாலிபருக்கும், ராஜபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒரு வாலிபருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதில் 2 பேர் திருச்சி அரசு மருத்துவமனையிலும், ஒருவர் சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 143 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி பெரம்பலூர், திருச்சி, சென்னை, அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் சிகிச்சை பெற்று, குணமடைந்த 141 பேர் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 2 பேர் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருந்து பெரம்பலூர் வந்த குன்னம் தாலுகா அசூர் கிராமத்தை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
    Next Story
    ×