என் மலர்
செய்திகள்

மின்சாரம் நிறுத்தம்
ஊ.மங்கலம் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
விருத்தாசலம் அருகே ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (11 -ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே ஊ.மங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (11 -ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை முதனை, ஊ. மங்கலம் கொல்லிருப்பு, இருப்புக் குறிச்சி மேலக்குப்பம், சமட்டிக்குப்பம், அரசகுழி, கொளப்பாக்கம், காட்டுக் கூனங்குறிச்சி, பொன்னாலகரம், அம்பேத்கர் நகர், இருப்பு, கோட்டேரி, நறுமணம், கங்கைகொண்டான், கோபாலபுரம், குமாரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை விருத்தாச்சலம் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்து உள்ளார்.
Next Story






