என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் நுழைவு சீட்டு வினியோகம்
Byமாலை மலர்4 Jun 2020 2:49 PM GMT (Updated: 4 Jun 2020 2:49 PM GMT)
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம் என்று புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24-ல் நடந்த தேர்வுக்கு ஊரடங்கால் வர முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வு வருகிற 18-ந் தேதி ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் நடக்கிறது.
இந்த தேர்வுகளை எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் வருகிற 15-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடக்கிறது.
பிளஸ்-1 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 26-ந் தேதி நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வு வருகிற 16-ந் தேதி மாணவர்கள் படித்த பள்ளியிலேயே நடத்தப்பட உள்ளது.
பிளஸ்-2 மாணவர்களுக்கு கடந்த மார்ச் 24-ல் நடந்த தேர்வுக்கு ஊரடங்கால் வர முடியாத மாணவர்களுக்கான மறு தேர்வு வருகிற 18-ந் தேதி ஏற்கனவே எழுதிய தேர்வு மையங்களில் நடக்கிறது.
இந்த தேர்வுகளை எழுத உள்ள அனைத்து தனித்தேர்வர்களும் இன்று (வியாழக்கிழமை) மதியம் 2 மணி முதல் இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் பள்ளி முதல்வர், துணை முதல்வர், தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X