என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 வாலிபர்கள் கைது

    உடையார்பாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உடையார்பாளையம்:

    உடையார்பாளையம் கடைவீதியில் 2 வாலிபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவாறு தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டிருந்ததாக உடையார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 22), ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மனோ(22) என்பது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    Next Story
    ×