என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    பனப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன் (வயது 48). இவர், டி.பார்ம் படித்துள்ளார்.

    அப்பகுதியில் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார்.

    தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி வந்தார். இதுகுறித்து கலெக்டருக்கு புகார் வந்ததது. அவரது உத்தரவுபடி மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் குழுவினர் பாணாவரம் பகுதிக்கு விரைந்து வந்து சிகிச்சை மையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அங்கிருந்த தயாளனை பிடித்து விசாரித்தபோது அவர் டி.பார்ம் படித்து விட்டு சிகிச்சை மையத்தை தொடங்கி 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறினார். தற்போது பரவி வரும் கொரோனா தொற்றுக்கும் சிகிச்சை அளிப்பதாக கூறினார்.

    மேலும் கிளினிக்கில் வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் பெண்களுக்கான கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பரிமுதல் செய்து கிளீனிக்குக்கு சீல் வைத்தனர்.

    தயாளன் மீது மாவட்ட மருத்துவ அலுவலர் கீர்த்தி பாணாவரம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலி டாக்டர் தயாளனை போலீசார் கைது செய்யப்பட்டார்.
    Next Story
    ×