search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தேர்தல் முன் விரோதத்தில் பயங்கர மோதல்- 4 பேர் கைது

    பண்ருட்டி அருகே தேர்தல் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் அருகே உள்ள அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 52). விவசாயி.

    இவர் கடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது தற்போதைய தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும், அய்யனாருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது.

    நேற்று அய்யனார் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் சுப்பிரமணி, முருகன், முத்துவேல், மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.

    ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அய்யனாரை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குபதிவு செய்து முருகன் உள்பட 4 பேரை கைது செய்தார்.

    Next Story
    ×