என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேர்தல் முன் விரோதத்தில் பயங்கர மோதல்- 4 பேர் கைது
Byமாலை மலர்30 May 2020 3:40 PM GMT (Updated: 30 May 2020 3:40 PM GMT)
பண்ருட்டி அருகே தேர்தல் முன் விரோதத்தில் ஏற்பட்ட மோதல் காரணமாக போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அண்ணா கிராமம் அருகே உள்ள அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் (வயது 52). விவசாயி.
இவர் கடந்த பஞ்சாயத்து தேர்தலின்போது தற்போதைய தலைவருக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் முன்னாள் பஞ்சாயத்து தலைவருக்கும், அய்யனாருக்கும் இடையே முன் விரோதம் உள்ளது.
நேற்று அய்யனார் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் ஆதரவாளர்கள் சுப்பிரமணி, முருகன், முத்துவேல், மணிகண்டன் ஆகியோர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் 2 பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவருக்கு ஒருவர் பயங்கரமாக தாக்கி கொண்டனர்.
ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் அய்யனாரை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து புதுப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குபதிவு செய்து முருகன் உள்பட 4 பேரை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X