என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுவையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்27 May 2020 12:05 PM GMT (Updated: 27 May 2020 12:05 PM GMT)
புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாவட்டத்திற்குட்பட்ட புதுவை, மாகி பகுதியை சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்த 2 பேர், சோலைநகர், மூகாம்பிகை நகர், தர்மாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை செய்ததில் இந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாகியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அடங்குவர்.
இதுதவிர புதுவை ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வரும் டிரைவர் வீட்டிற்கு சென்னை கொடுங்கையூரில் இருந்து வந்த குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புதுவையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை மாவட்டத்திற்குட்பட்ட புதுவை, மாகி பகுதியை சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்த 2 பேர், சோலைநகர், மூகாம்பிகை நகர், தர்மாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை செய்ததில் இந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாகியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அடங்குவர்.
இதுதவிர புதுவை ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வரும் டிரைவர் வீட்டிற்கு சென்னை கொடுங்கையூரில் இருந்து வந்த குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புதுவையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X