என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    சாலை வரியை ரத்து செய்ய கோரி கார்-ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

    கடலூர் அருகே சாலை வரி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கார்-ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    தமிழகத்தில் கால் டாக்ஸி, மேக்சி கேப், ஆட்டோ ஓட்டுனர்கள் என பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே உரிமைக்குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் இன்று காலை கடலூர் மாவட்ட பொறுப்பாளர் ஷேக் தாவூது தலைமையில் சுமார் 60க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    பின்னர் ஊரடங்கு உத்தரவு காலத்தில் கட்ட வேண்டிய 2 காலாண்டு வாகன வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். வாகனத்தின் தகுதி சான்று, ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், பர்மிட் ஆகியவற்றுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் அளிக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்யாத மற்றும் பதிவு செய்த கால் டாக்ஸி, மேக்சி கேப் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நிவாரணத் தொகையாக 20 ஆயிரம் வழங்க வேண்டும்.

    கால்டாக்சி, மேக்சி கேப், ஆட்டோக்கள் 50 சதவீதம் பயணிகளுடன் தமிழகம் முழுவதும் இயக்க அனுமதி அளிக்க வேண்டும். வாகன தவணையை கட்டுவதற்கு 6 மாத காலம் அவகாசம் ரிசர்வ் வங்கி வழங்கியுள்ள நிலையில் கடன்களுக்கு எந்தவித வட்டியும் அபராதமும் நிதி நிறுவனங்கள் விதிக்கக் கூடாது.

    மேற்கண்ட கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுடைய வாகனத்தை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைப்பது தவிர வேறு வழி இல்லை என கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதிலிருந்து அங்கிருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக கலெக்டரிடம் கோரிக்கை மனு அறியுங்கள் என கூறினார்கள்.
    Next Story
    ×