search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நாகை அருகே சமையல் செய்த பெண் தீ விபத்தில் பலி

    நாகை அருகே சமையல் செய்த பெண் தீ விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் நக்கம்பாடி பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 28). விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு திருமணம் ஆகி 6 வருடம் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று புவனேஸ்வரி வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்த போது புடவையில் தீப்பற்றி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இதுகுறித்து பாலையூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் வேலுதேவி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×