என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேகத்தடை அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல்- வாலிபர் கைது
Byமாலை மலர்24 May 2020 12:15 PM GMT (Updated: 24 May 2020 12:15 PM GMT)
வடகாடு அருகே வேகத்தடை அமைப்பதில் இருதரப்பினரிடையே மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடகாடு:
வடகாடு அருகே உள்ள கன்னியாங்கொல்லை பகுதியில் ஒரு தரப்பினர் தாங்கள் வசிக்கும் பகுதி அருகே உள்ள சாலையில் வேகத்தடை அமைத்தனர். இதற்கு வானக்கன்காடு பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வேகத்தடையை அகற்றி உள்ளனர்.
இதில் இரு தரப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினரில் காயமடைந்த 3 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து இருதரப்பினரும் வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, வானக்கன்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X