என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுக்கடைகளை திறக்காததால் அரசுக்கு நாளுக்கு ரூ.2½ கோடி வருவாய் இழப்பு
Byமாலை மலர்21 May 2020 9:57 AM GMT (Updated: 21 May 2020 9:57 AM GMT)
புதுவையில் மதுக்கடைகளை திறக்காததால் அரசுக்கு நாளுக்கு ரூ.2½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தொடங்கி மது, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் புதுவையில் மூடிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் மதுபான கடைகளை 19-ந்தேதி முதல் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கவர்னர் கிரண்பேடி அனுமதி தராததால் மதுக்கடைகளை திறக்க இன்று (வியாழக்கிழமை) வரை அனுமதி கிடைக்கவில்லை. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கலால்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இதன்படி மாதத்துக்கு ரூ.75 கோடியும், நாளுக்கு ரூ.2½ கோடியும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அமைச்சரவை முடிவு எடுத்து 2 நாட்கள் ஆகியும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் அரசுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கவர்னர் இன்று அனுமதி அளித்தாலும் நாளையே (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் 3-வது நாளாக இன்றோடு சேர்த்து ரூ.7½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 55 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்னவே ரூ.137½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுக்கு மேலும் கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி தொடங்கி மது, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகள் புதுவையில் மூடிக்கிடக்கிறது.
தமிழகத்தில் கடந்த 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுவையிலும் மதுபான கடைகளை 19-ந்தேதி முதல் திறக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கவர்னர் கிரண்பேடி அனுமதி தராததால் மதுக்கடைகளை திறக்க இன்று (வியாழக்கிழமை) வரை அனுமதி கிடைக்கவில்லை. புதுவை மாநிலத்தை பொறுத்தவரை கலால்துறை மூலம் ஆண்டுக்கு ரூ.900 கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.
இதன்படி மாதத்துக்கு ரூ.75 கோடியும், நாளுக்கு ரூ.2½ கோடியும் அரசுக்கு வருமானம் கிடைக்கும். அமைச்சரவை முடிவு எடுத்து 2 நாட்கள் ஆகியும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை.
இதனால் அரசுக்கு ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கவர்னர் இன்று அனுமதி அளித்தாலும் நாளையே (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகள் திறக்கப்படும். இதன் மூலம் 3-வது நாளாக இன்றோடு சேர்த்து ரூ.7½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மே 19-ந்தேதி வரை 55 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஏற்னவே ரூ.137½ கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த வருவாய் இழப்பு நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அரசுக்கு மேலும் கூடுதல் நெருக்கடியை உருவாக்கி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X