என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கைது
சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேர் கைது
By
மாலை மலர்16 May 2020 1:23 PM GMT (Updated: 16 May 2020 1:23 PM GMT)

திருச்சி அருகே சமையல் கியாஸ் சிலிண்டர் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மலைக்கோட்டை:
திருச்சி ஸ்ரீரங்கம் நெல்சன் ரோடு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணராஜன் (வயது 36). இவர் சிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு சமையல் கியாஸ் ஏஜென்சி நிறுவனத்தில் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர், நேற்று காலை திருச்சி பெரியகடைவீதி பகுதியில் வெள்ளை வெற்றிலை தெருவில் வாடிக்கையாளர் ஒருவருக்கு கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்ய எடுத்து சென்றார். அப்போது அவரது இரு சக்கர வாகனத்தில் 4 சிலிண்டர்கள் இருந்தது. அப்போது அவரது வண்டியில் இருந்த ஒரு சமையல் கியாஸ் சிலிண்டரை எடுத்துக்கொண்டு 2 பேர் ஓட்டம் பிடித்தனர்.
அதைக்கண்ட லட்சுமணராஜன் சுதாரித்து கொண்டு திருடன்... திருடன் என உரக்க கத்திக் கொண்டே துரத்திக் கொண்டு ஓடினார். அப்பகுதியில் இருந்தவர்கள் உதவியுடன் சிலிண்டரை திருடிக்கொண்டு ஓடிய இருவரையும் மடக்கி பிடித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தார். அவர்களை சப்-இன்ஸ்பெக்டர் கருணாகரன் கைது செய்தார். விசாரணையில் கைதானவர்கள் திருச்சி சங்கிலியாண்டபுரம் பாரதி தெருவைச் சேர்ந்த ஷேக்தாவூத் (30), திருநாவுக்கரசு (21) ஆகியோர் என்பது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
