என் மலர்tooltip icon

    செய்திகள்

    எலிகள்
    X
    எலிகள்

    ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளில் மது குடித்து எலிகள் அட்டகாசம்- அதிகாரிகள் அதிர்ச்சி

    புதுவையில் ‘சீல்’ வைக்கப்பட்ட கடைகளில் மதுபாட்டில்களை உடைத்து எலிகள் அட்டகாசம் செய்திருப்பதை கண்ட ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    புதுச்சேரி:

    ஊரடங்கு உத்தரவால் புதுவையில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் கடந்த 50 நாட்களாக மூடப்பட்டுள்ளன.

    கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டதால் கலால்துறை அனைத்து மதுபான கிடங்கு மற்றும் கடைகளுக்கு சீல் வைத்தனர் தொடர்ந்து கலால் துறையினர் மதுபான கடை மற்றும் கிடங்கில் இருப்பு கணக்குகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சரக்கு இருப்பில் மாறுபாடு இருந்ததினால் 100 மதுபான கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 70 கடைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மறைமலை அடிகள் சாலையில் உள்ள மதுபான கடையை திறந்து கலால் துறை அதிகாரிகள் இருப்பு கணக்கை ஆய்வு செய்தனர். அப்போது மது பாட்டில்கள் உடைந்து காணப்பட்டன.

    ஒயின் பாக்கெட்டுகள் கிழிந்து காணப்பட்டன. இதனால் கடை முழுவதும் நாற்றம் வீசியது. கடைக்கு பின்புறம் உள்ள காலிமனையிலிருந்து ஏராளமான எலிகள் கடைக்குள் நுழைந்து மதுபாட்டில்களை கீழே தள்ளி மதுவை குடித்தும், ஒயின் பாக்கெட்டுகளை கிழித்தும் எலிகள் கடித்துள்ளன.

    இதனால், இருப்பு கணக்கில் சில பாட்டில் மதுவும், ஒயின் பாக்கெட்டுகளும் குறைந்தது. இதற்கு எலிகள் மீதா வழக்கு போடுவது.? என அதிகாரிகள் புலம்பியபடியே வெளியேறினர்.

    Next Story
    ×