என் மலர்
செய்திகள்

கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்
மாநில எல்லைகளில் தொடர்ந்து கண்காணிப்பு தீவிரம்
கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து யாரும் புதுவைக்கு வராத வகையில் முட்களை கொட்டி வேலி அமைத்து முழுவதும் மூடி, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக இருசக்கரவாகனங்களில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.
இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் புதுவை எல்லைகளை உடனடியாக முற்றிலும் முள்வேலி அமைத்து மூட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பாகூர் பகுதியில் அரங்கனூர், சித்தேரி அணைக்கட்டு, சோரியாங்குப்பம், ஏரிக்கரை பகுதி, இருளன்சந்தை ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மற்றும் பாகூர் போலீசார் இணைந்து கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து யாரும் புதுவைக்கு வராத வகையில் முட்களை கொட்டி வேலி அமைத்து முழுவதும் மூடினர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கனூர் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழக பகுதியான ஐவேலி, பொம்பூர், பக்கிரிபாளையம், கண்டமங்கலம், பெரிய பாபுசமுத்திரம்,குயிலாப்பாளையம், மதுரப்பாக்கம் வழியாக வருபவர்கள் மணலிப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் நுழைந்து வருகின்றனர். இதனால் திருக்கனூர், காட்டேரிகுப்பம் பகுதிகள் முழுவதும் “சீல்” வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் போலீசாரின் முழு கண்காணிப்பில் உள்ளது.
மேலும் மதகடிப்பட்டு, காலாப்பட்டு, கோட்டக்குப்பம்,கோரிமேடு எல்லை பகுதிகளிலும் போலீசார் அதிக அளவில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சுகாதாரம், செவிலியர் பணிக்கு வருபவர்களை மட்டும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
புதுச்சேரியை ஒட்டியுள்ள கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டு விழுப்புரம் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
இதே போல் கடலூர் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.கடலூர், விழுப்புரம் மாவட்ட பகுதிகளில் உள்ளவர்கள் கிராமப்புற சாலைகள் வழியாக இருசக்கரவாகனங்களில் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.
இவர்கள் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து எல்லைகளும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று நாராயணசாமி எச்சரித்தார்.
இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் புதுவை எல்லைகளை உடனடியாக முற்றிலும் முள்வேலி அமைத்து மூட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலைய அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து பாகூர் பகுதியில் அரங்கனூர், சித்தேரி அணைக்கட்டு, சோரியாங்குப்பம், ஏரிக்கரை பகுதி, இருளன்சந்தை ஆகிய 5 இடங்களில் பொதுப்பணித்துறை ஊழியர்கள், மற்றும் பாகூர் போலீசார் இணைந்து கடலூர், விழுப்புரம் பகுதியில் இருந்து யாரும் புதுவைக்கு வராத வகையில் முட்களை கொட்டி வேலி அமைத்து முழுவதும் மூடினர். மேலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருக்கனூர் விழுப்புரம் மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழக பகுதியான ஐவேலி, பொம்பூர், பக்கிரிபாளையம், கண்டமங்கலம், பெரிய பாபுசமுத்திரம்,குயிலாப்பாளையம், மதுரப்பாக்கம் வழியாக வருபவர்கள் மணலிப்பட்டு, சோரப்பட்டு, செல்லிப்பட்டு, மண்ணாடிப்பட்டு, கூனிச்சம்பட்டு கிராமங்களில் நுழைந்து வருகின்றனர். இதனால் திருக்கனூர், காட்டேரிகுப்பம் பகுதிகள் முழுவதும் “சீல்” வைக்கப்பட்டு பொதுப்பணித்துறை மற்றும் போலீசாரின் முழு கண்காணிப்பில் உள்ளது.
மேலும் மதகடிப்பட்டு, காலாப்பட்டு, கோட்டக்குப்பம்,கோரிமேடு எல்லை பகுதிகளிலும் போலீசார் அதிக அளவில் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இருந்து புதுவைக்கு சுகாதாரம், செவிலியர் பணிக்கு வருபவர்களை மட்டும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.
Next Story






