search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வேலூரில் சாராயம் கடத்திய 14 பேர் கைது

    வேலூரில் சாராயம் கடத்திய 14 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சாராயத்தை அழித்ததோடு, மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சிலர் லாரி டியூப்களில் சாராயம் கடத்திச் சென்றவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் ஊசூரை சேர்ந்த விஜயகுமார் (வயது 23), அத்திரியூரை சேர்ந்த தினேஷ் (27), அருப்பமேடு பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (41), சேண்பாக்கம் ஜீவாநகரை சேர்ந்த சுரேஷ் (35), சாந்தாராம் (29), தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஜெகன் (30) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிள், 100 லிட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாராயம் கடத்தியதாக சுனில், மேகநாதன், இலக்கிய செல்வன், தினகரன், சத்தியராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 285 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்ததோடு, ஒரு மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேலப்பாடியை சேர்ந்த அருள் (25), வேலூரை சேர்ந்த ஜெயக்குமார் (42), கலங்கமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (24) ஆகியோர் லாரி டியூப்களில் சாராயம் கடத்தினர். 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 85 லிட்டர் சாராயம், ஒரு மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×