என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநள்ளாறு காவல் நிலையம்
    X
    திருநள்ளாறு காவல் நிலையம்

    விசாரணை கைதிக்கு கொரோனா- மூடப்பட்ட திருநள்ளாறு காவல் நிலையம்

    விசாரணை கைதிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து திருநள்ளாறு காவல் நிலையம் மூடப்பட்டது.
    புதுச்சேரி:

    திருநள்ளாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுரக்குடியே சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவர், தகராறு வழக்கு ஒன்றில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவரை சிறைக்கு கொண்டு செல்லும் முன் கைதிக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் வசித்த சுரக்குடி கிராமம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்த நபர் விசாரணைக்காக திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்ததால் காவல் நிலையம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனால் காவல் நிலையம் திருநள்ளாறு கோயில் அருகில் உள்ள புறகாவல் நிலையத்தில் இயங்குகிறது.

    காவல்நிலையத்தை சேர்ந்த போலீசார் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. 
    Next Story
    ×