என் மலர்
செய்திகள்

வழக்கு பதிவு
அகதிகள் முகாமில் குடிபோதையில் தகராறு- 7 பேர் மீது வழக்கு
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானாமதுரை:
மானாமதுரை அருகே மூங்கில் ஊரணி பகுதியில் அகதிகள் முகாம் உள்ளது. இங்கு தலைவராக இருப்பவர் நடராஜன் (வயது55). சம்பவதன்று முகாமை சேர்ந்த சரண்ராஜ், நிகஷன் மற்றும் சிலர் மது அருந்திவிட்டு சத்தம் போட்டு கொண்டு இருந்தனர். இதை நடராஜன் தட்டிக்கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள் நடராஜனை தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சரண்ராஜ், நிகஷன், வசந்தகுமார், சசிகுமார், நர்மால், கனிசல், சஞ்சய் ஆகிய 7 பேர் மீது மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






