search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு

    காரைக்குடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 6 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.
    காரைக்குடி:

    காரைக்குடி செக்காலை முதல் வீதியில் வசிப்பவர் மீனாள் (வயது 30). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது முகமூடி அணிந்த 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்தனர். இருவர் வீட்டின் வெளியே நிற்க 2 பேர் மட்டும் வீட்டுக்குள் சென்று மீனாளிடம் அரிவாளை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துச்சென்று விட்டனர்.

    இது குறித்து மீனாள் காரைக்குடி வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×