என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தொற்று
    X
    கொரோனா தொற்று

    ஜிப்மரில் 3 பேருக்கு கொரோனா - டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள் 40 பேர் தனிமைபடுத்தப்பட்டனர்

    ஜிப்மரில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக்டர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள், துப்புரவு தொழிலாளர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஏற்கனவே 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இவர்களில் 71 வயது முதியவர் இறந்தார். 5 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள புதுவை யூனியன் பிரதேசமான மாகி பகுதியில் வீடு வீடாக சுகாதார துறையினர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது வளைகுடா நாடுகளுக்கு சென்று திரும்பிய 51 வயது நபருக்கு சந்தேகத்தின் பேரில் கொரோனா சோதனை செய்யப்பட்டது.

    இதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை சுகாதாரத் துறையினர் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்

    புதுவை மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 4 பேர் மட்டுமே தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேர்ந்த 64 வயது மூதாட்டி ஜிப்மரில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.

    இதையடுத்து ஜிப்மர் வளாகத்தில் கொரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்தியோக மருத்துவ வளாகத்திற்கு மூதாட்டி மாற்றப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மூதாட்டியின் உதவிக்காக வந்திருந்த ஆண் மற்றும் பெண் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது தொடர்ந்து அவர்களும் சிகிச்சைக்காகக அனுமதிக்கட்டுள்ளனர்.

    மேலும், மூதாட்டி சிகிச்சை பெற்று வந்த மெடிசன் வார்டில் இருந்தவர்களுக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது இதனால் மூதாட்டி தங்கியிருந்த வார்டுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் வார்டில் இருந்த டாக்டர்கள், செவிலியர்கள் லேப் டெக்னீசியன்கள் துப்புரவு தொழிலாளர்கள் என 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×