என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது பாட்டில்கள் அழிப்பு
    X
    மது பாட்டில்கள் அழிப்பு

    3 ஆண்டுகளுக்கு முன் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் அழிப்பு

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் உடைத்து அழித்தனர்.
    சீர்காழி:

    சீர்காழி மதுவிலக்கு பிரிவு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை பதியப்பட்ட வெளிமாநில மது கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 2448 மது பாட்டில்கள் அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப் பட்டிருந்தது.

    அவைகள் அனைத்தையும் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சட்டநாதபுரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அந்த மதுபாட்டில்கள் அனைத்தும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி சுவாமிநாதன் முன்னிலையில் போலீசார் உடைத்து அழித்தனர். வெளிமாநில மது பாட்டில்கள் அளிக்கப்பட்டதை போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

    Next Story
    ×