என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக முழு ஊரடங்கினால் புதுவையில் கூட்டம் குறைந்தது
Byமாலை மலர்27 April 2020 2:30 PM GMT (Updated: 27 April 2020 2:30 PM GMT)
புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வந்தால், நோய் தொற்று அதிகமாகும் என்பதால், புதுவை எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்துக்குள் நுழையும் 82 நுண்ணிய பாதைகளும் அடைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு புதுச்சேரி வரும் மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்தது.
வாகனங்கள் அனைத்தும் புதுவை எல்லை பகுதிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன. புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதுவை சாலைகளில் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. புதுவையில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. பக்கத்து மாவட்டங்களான கடலூர், விழுப்புரத்தை சேர்ந்தவர்கள் புதுவைக்குள் வந்தால், நோய் தொற்று அதிகமாகும் என்பதால், புதுவை எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மாநிலத்துக்குள் நுழையும் 82 நுண்ணிய பாதைகளும் அடைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இந்த மாவட்டங்களில் இருந்து மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு புதுச்சேரி வரும் மக்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக குறைந்தது.
வாகனங்கள் அனைத்தும் புதுவை எல்லை பகுதிக்கு முன்பாகவே நிறுத்தப்பட்டன. புதுவைக்குள் யாரும் நுழையாதவாறு ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதனால் புதுவை சாலைகளில் காலை நேரத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X