என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி
Byமாலை மலர்27 April 2020 8:52 AM GMT (Updated: 27 April 2020 8:52 AM GMT)
புதுச்சேரி அருகே போலி உரிமம் தயாரித்து கொடுத்து ஓட்டல் உரிமையாளரிடம் மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்.
கடந்த ஆண்டு இவரது ஓட்டலில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியான உரிமம் பெற்று ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீனிவாசனிடம் ரூ.3500 பெற்று திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்திருந்தது தெரியவந்தது.
இதையத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகிறார்கள். மேலும் கணேசன் இதுபோன்று பலருக்கும் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து பணமோசடி செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காலாப்பட்டு அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி அருகே ஓட்டல் நடத்தி வருபவர் சீனிவாசன்.
கடந்த ஆண்டு இவரது ஓட்டலில் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது போலியான உரிமம் பெற்று ஓட்டல் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சீனிவாசனிடம் ரூ.3500 பெற்று திலாஸ்பேட்டை அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் என்பவர் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்திருந்தது தெரியவந்தது.
இதையத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவாவிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணேசனை தேடி வருகிறார்கள். மேலும் கணேசன் இதுபோன்று பலருக்கும் போலியாக உரிமம் சான்றிதழ் தயாரித்து கொடுத்து பணமோசடி செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X