என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்பட்டு அருகே பிரம்மாண்ட கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியம்
Byமாலை மலர்25 April 2020 5:34 PM GMT (Updated: 25 April 2020 5:34 PM GMT)
சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 150க்கு 100 அடி அளவிலான பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு:
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர அனாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீசார் அறிவுறுத்தியும் அதையும் மீறி மோட்டார் சைக்கிள்களில் சிலர் சாலையில் சுற்றித்திரிகிறார்கள்.
இவர்களை எச்சரிக்கும் விதமாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 150க்கு 100 அடி அளவிலான பிரம்மாண்டமான கொரோனா வைரஸ் ஓவியம் வரையப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட ஓவியர்கள் நலச்சங்க நிர்வாகிகள், மாவட்ட போலீசார், பாரதி சேவா சங்கத்தினர் மற்றும் அனைத்து ஓவியர்கள் ஒன்றிணைந்து பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகத்திலேயே மிக பிரம்மாண்டமான அளவில் இந்த கொரோனா வைரஸ் விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்து, அதன் கீழ் தனித்திரு... விழித்திரு... வீட்டிலிரு... என்ற வாசகத்தை எழுதி உள்ளனர்.
ஆள் இல்லா குட்டி விமானம் மூலம் பார்க்கும்போது இந்த ஓவியம் பிரம்மாண்டமாக உள்ளது. இது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X