என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
கிராமங்களுக்கு பரவிய கொரோனா- சாலையை துண்டித்து எல்லை மூடல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து ராயம்புரம் கிராமத்திற்கும் கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலை மூடப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மருந்துக்கடையில் வேலை பார்த்தவர்.
அவர் மூலமாக அதே தெருவில் மேலும் இரண்டு பேருக்கும் கொரோனா உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் உள்ள 60-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
ஒரே கிராமத்தில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அரியலூர் மாவட்ட கிராம பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொரோனா பரவாத வண்ணம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பாதைகளை மூடி வருகின்றனர். அதன்படி ராயம்புரம் கிராமத்திற்கும் கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலையை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து மண்ணை கொட்டி மூடினார்.
அதேபோன்று சென்னி வனம் பகுதிக்கு செல்லும் பாதையிலும் மண்ணை கொட்டி மூடினர். மேலும் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ராயம்புரம் பகுதியில் இருந்து யாரும் உள்ளே வராமலும் இங்கிருந்து யாரும் வெளியே செல்லாமலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து சாலைகளை வெட்டிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமத்தில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவரின் மருந்துக்கடையில் வேலை பார்த்தவர்.
அவர் மூலமாக அதே தெருவில் மேலும் இரண்டு பேருக்கும் கொரோனா உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் உள்ள 60-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். இதற்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை.
ஒரே கிராமத்தில் வசிக்கும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது அரியலூர் மாவட்ட கிராம பகுதிகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட போலீசார் தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொரோனா பரவாத வண்ணம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பாதைகளை மூடி வருகின்றனர். அதன்படி ராயம்புரம் கிராமத்திற்கும் கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலையை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து மண்ணை கொட்டி மூடினார்.
அதேபோன்று சென்னி வனம் பகுதிக்கு செல்லும் பாதையிலும் மண்ணை கொட்டி மூடினர். மேலும் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ராயம்புரம் பகுதியில் இருந்து யாரும் உள்ளே வராமலும் இங்கிருந்து யாரும் வெளியே செல்லாமலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் இணைந்து சாலைகளை வெட்டிய சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






