என் மலர்
செய்திகள்

தொலைபேசி சேவை
ஜிப்மரில் சிகிச்சைகளுக்கு தொலைபேசி சேவை- இயக்குனர் தகவல்
நோயாளிகள் தொலைபேசி மூலம் டாக்டர்களிடம் பேசி ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம் என்று புதுவை ஜிப்மர் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் ஜிப்மர் கோவிட்19 மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதுவை, தமிழகத்திற்கான கோவிட்19 சோதனை சேவைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர அனைத்து துறைகளிலும் அவசர சேவைகள் முழுமையாக இயங்கி வருகிறது. நாள்தோறும் 100-க்கும் மேற்பட்டோருக்கு ஹீமோடையாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கதிர்வீச்சு, ஆன்காலஜி, மருத்துவ புற்றுநோய் துறைகள் தங்கள் சேவைகளை வழங்கி வருகிறது.
சில துறைகளில் தொலை பேசி ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற துறைகளிலும் இந்த சேவையை தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நோயாளிகள் தொலைபேசி மூலம் டாக்டர்களிடம் பேசி ஆலோசனை, மருந்து விபரங்களை பெறலாம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






