என் மலர்
செய்திகள்

வழிப்பறி கொள்ளையர்கள் 3 பேர் கொன்று புதைப்பு- திருட்டு வழக்கில் சிக்கிய கும்பல் பரபரப்பு தகவல்
வேலூர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் ஹவுசிங் போர்டு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு 4வாலிபர்கள் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தனர். அதில் 3 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்கள் ராணிப்பேட்டையை சேர்ந்த யுவராஜ், வாசு, அரவிந்தன் என்பது தெரியவந்தது. தப்பி ஓடிய ஜெயபிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
இவர்கள் கடந்த மார்ச் மாதம் ராணிப்பேட்டை சிப்காட்டில் பெண்ணிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தப்பி ஓடிய ஜெயபிரகாஷ் மற்றும் சென்னையை சேர்ந்த 4 பேர் என 8 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருட்டு மற்றும் வழிப்பறி செய்வதில் ஏற்பட்ட போட்டி காரணமாக சென்னையை சேர்ந்த ஆசிப் விழுப்புரத்தைச் சேர்ந்த நவீன், சூர்யா ஆகிய 3 பேரையும் வெட்டிக் கொலை செய்து திருவலம்கெம்பராஜபுரம் கிராமத்தில் உள்ள பனந்தோப்பு பகுதி பொன்னையாற்றில் புதைத்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் 3 பேரின் புகைப்படங்களையும் குற்றவாளிகள் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்களை வைத்து சென்னை விழுப்புரத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






