என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகார்
    X
    புகார்

    புதுவை போலீஸ் அதிகாரி மீது பாலியல் தொல்லை புகார்

    திருபுவனை பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். அவர் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    திருபுவனை பகுதியில் புதுவை உயர் போலீஸ் அதிகாரி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.

    அவர் அங்குள்ள பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீசுக்கு புகார் வந்தது. இதுதொடர்பாக திருபுவனை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளதாகவும், அவர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது எந்த தகவலும் சொல்ல மறுத்து விட்டனர்.

    Next Story
    ×